2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புதுக்குடியிருப்பில் TIDயால் இருவர் கைது

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு - உடையார் கட்டுப்பகுதியில், நேற்று  (11) பயங்கரவாதக்  குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உடையார்கட்டு தெற்கு, வடக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில், அண்மையில், வெடிமருந்துகளை வைத்திருந்த சம்பவம் தொடர்பில்  கைதுசெய்யப்பட்ட நபருடன் தொடர்பை வைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டே, இவ்விருவரும்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்பில், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .