2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

129 பேர் சமுதாயம் சார் சீர்திருத்தப் பணிக்கு உட்படுத்தப்பட்டனர்

Sudharshini   / 2016 ஜூலை 19 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுகுற்றங்களில் ஈடுபட்டு அபராதப் பணம் செலுத்த முடியாத 129 பேர், சமுதாயம்சார் சீர்திருத்த பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சமுதாயம்சார் சீர்திருத்தத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டு நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்;டு, நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக சமுதாயம் சார் சீர்திருத்தப்பணிகளில் இவர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

கஞ்சா உடமையில் வைத்திருந்தமை, அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் வைத்திருந்தமை, கசிப்பு காய்ச்சல், விற்பனை செய்தமை, மரம் வெட்டியமை, மதுபோதையில் பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டமை போன்ற  குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களே கைது செய்யப்பட்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .