2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மூவருக்கு 90 ஆயிரம் அபராதம்

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

போக்குவரத்து விதிமுறையினை மீதி வாகனம் செலுத்திய சாரதிகள் மூவருக்கு 90ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதிவான் நளினி கந்தசாமி உத்தரவிட்டார்.

மதுபோதையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிள்  செலுத்திய கொற்றாவத்தை 30ஆயிரம் ரூபாவும், சாரதி அனுமதிபத்திரமின்றி பொலிஸ் சமிஞ்ஞையினை மீறி, தலைக்கவசமின்றி அவதானக்குறைவாக மோட்டார் சைக்கிள் செலுத்திய  அல்வாய் பகுதியினை சேர்ந்த நபர் ஒருவருக்கு, 26ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

அதேபோல் மதுபோதையில் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வருமானவரிப்பத்திரம் மற்றும் காப்புறுதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியவருக்கு 34ஆயிரம் தண்டமாக விதிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .