2024 மார்ச் 28, வியாழக்கிழமை

முல்லைத்தீவில் 42,158 குடும்பங்கள் மீள்குடியமர்வு

Gavitha   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 42,158 குடும்பங்களைச் சேர்ந்த 133,750 அங்கத்தவர்கள்  மீளக்குடியமர்ந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

துணுக்காயில் 3,786 குடும்பங்களைச் சேர்ந்த 11,856 அங்கத்தவர்களும் மாந்தைகிழக்கில் 2,933 குடும்பங்களைச் சேர்ந்த 9,197 அங்கத்தவர்களும், ஒட்டுசுட்டானில் 5,961 குடும்பங்களைச் சேர்ந்த 19,415 அங்கத்தவர்களும், கரைதுறைப்பற்றில் 13,224 குடும்பங்களைச் சேர்ந்த 42,079 அங்கத்தவர்களும், புதுக்குடியிருப்பில் 12,918 குடும்பங்களைச் சேர்ந்த 40,014 அங்கத்தவர்களும், வெலிஓயாவில் 3,336 குடும்பங்களைச் சேர்ந்த 11,189 அங்கத்தவர்களும் குடியமர்ந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X