2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன் 

வவுனியா - வேப்பங்குளம் பகுதியில், நேற்று  காலை 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேப்பங்குளம் பகுதியிலுள்ள தமது வீட்டிலிருந்து நகர் நோக்கி மன்னார் வீதி வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வேப்பங்குளம் – 5ஆம் ஒழுங்கைக்கு முன்பாக வீதியில் சென்றுகொண்டிருந்த வேளை, எதிர் திசையில்  வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் 30,25 வயதுடைய கணவன், மனைவி ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .