2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விபத்தில் இளைஞன் பலி

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பு - பரந்தன், மூங்கிலாற்று பகுதியில், நேற்று (12) மாலை, மோட்டார் சைக்கிளொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில், இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்த இளைஞன், உடையார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராசா பிரசன்னா (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில், மூங்கிலாற்று பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் மது அருந்திவிட்டு செல்லும் போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .