2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Editorial   / 2019 நவம்பர் 08 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - முள்ளியவளை நெடுங்கேணி சந்திக்கு அருகில், நேற்று (7) மாலை நடைபெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

 

இவ்விபத்தில் குமாரபுரம் முறிப்பு எனும் முகவரியைச் சேர்ந்த 56 வயதுடைய சத்தியானந்தசெல்வன் என்பவரே, படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபர், நெடுங்கோணி வீதியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, சொகுசு வாகனம் ஒன்று அவரை மோதிவிட்டு சென்றுள்ளதாகத் தெரியவருகிறது.

இவ்விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .