2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘வெள்ள இடர் தொடர்பில் பதிவுகள் இல்லை’

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

முல்லைத்தீவில், கூடுதலான மழை வீழ்ச்சி பதிவாகின்ற போதிலும், வெள்ள இடர் தொடர்பான பதிவுகள் எவையும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்குக் கிடைக்கவில்லையென, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், இடர் முகாமைத்துவக் கூட்டம், அண்மையில் நடத்தப்பட்டதாகவும் மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்கள் மூலம் இயற்கை இடரை எதிர்கொள்வதற்கான முழுமையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவெனவும் தெரிவித்தார்.

அத்துடன், முப்படைகளின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .