2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

வவுனியாவில் மகளிர் தின நிகழ்வு

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

“அனைவரும் சமம்” எனும் தொனிப்பொருளில், வடமாகாண மகளிர் விவகார அமைச்சு, வவுனியா மாவட்டச் செயலகம், அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியன இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு, வவுனியா நகரசபை மண்டபத்தில், இன்று (10) நடைபெற்றது.

வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண பிரதமச் செயலாளர் அ.பத்திநாதன் கலந்துகொண்டார்.

இதன்போது, மாகாண ரீதியில் பெண் தொழில் முயற்சியார்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், குத்துச்சண்டைப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்றிருந்த வீராங்கனைகளும் கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .