2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் 10 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

நாடாளுமன்ற தேர்தலில், வன்னியில் போட்டியிட மேலும் 10 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

இத்தேர்தலில், வன்னி மாவட்டத்தில் சுயேட்சைக்குழுவில் போட்டியிடுவதற்காக மார்ச் 3ஆம் திகதியில் இருந்து 10ஆம் திகதி வரை, 10 சுயேட்சைக்குழு கட்டுப்பணத்தை வவுனியா மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் திணைக்களத்தில்  செலுத்தியுள்ளன.

இதேவேளை, வேட்புமனு தாக்கல் இன்றில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், வவுனியா மாவட்டச் செயலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .