2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘20,479 வெடிபொருகள் அகற்றல்’

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் நிறுவனத்தால், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் இவ்வாண்டு நவம்பர் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 20,479 அபாயகரமான வெடிபொருள்களை அகற்றியுள்ளதாக, ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கெப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம், தச்சடம்பன் பகுதிகளிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் உள்ள 930,689 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்தே, இந்த வெடிபொருக்ளக் அகற்றப்பட்டுள்ளனவெனத் தெரிவித்தார்.

அத்துடன், முகமாலை பகுதியில், கண்ணிவெடியகற்றும் பணிகளை துரித கதியில் முன்னெடுத்து வருவதாகவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .