Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் தமிழ்ச் செம்மொழி விழாவையொட்டி கவிதை மற்றும் சிறுகதைப் போட்டிகள் இடம்பெறவுள்ளது.
முதலாம் இடத்திற்கு 5000 ரூபாவும் இரண்டாம் இடத்திற்கு 3000 ரூபாவும் மூன்றாம் இடத்திற்கு 2000 ரூபாவும் ஏனைய 9 படைப்புக்களுக்கும் பரிசுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
கவிதை அல்லது சிறுகதையானது ஈழத்தமிழரின் அவலங்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். எங்கும் பிரசுரிக்கப்படாததாக இருத்தல் வேண்டும். தலைப்பினை போட்டியாளர்களே தீர்மானிக்க வேண்டும். இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் இப்போட்டியில் பங்குபற்ற முடியும். போட்டி முடிவுத் திகதி செப்டெம்பர் 3 ஆம் திகதியாகும். அனுப்ப வேண்டிய முகவரி வி.எஸ்.சிவகரன், பொதுச்செயலாளர், புனித வளனார் மாணவர் இல்லம், இல. 130 வைத்தியசாலை, மன்னார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
4 hours ago
7 hours ago
7 hours ago