2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வவுனியா வீதி விபத்தில் யுவதி பலி

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா அரசினர் வைத்தியசாலைக்கு முன்பாக ஏ- 9 வீதியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் யுவதி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார்.

இவர் வவுனியாவில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றும்  நடேசலிங்கம் லோஜனி (வயது 23) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இறந்தவர் ஏ - 9 வீதியால் தனது துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தப்போது பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

தலைநசிந்து யுவுதி மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .