2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பூநகரியில் ஏர் பூட்டும் நிகழ்வு

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)
கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிப்பதற்கான சம்பிரதாயபூர்வ நிகழ்வான ‘ஏர் பூட்டும் வைபவம்’ இன்று (24-08-2010) பூநகரி, செல்லையாத்தீவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கமநல அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், விவசாயத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் 600 விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமது வயல்களில் நெற்செய்கையில் ஈடுபடுவதற்கு கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு இப்பொழுது அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .