2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாணவர்களுக்கு பாராட்டு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 07 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

கடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 3ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்ட மன்/புனித சவேஜியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் ஜெனிங் யூட் நிதுர்சன் பிரொடோவையும் அப்பாடசாலையில் சித்தியடைந்த ஏனைய 25 மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று வியாக்கிழமை மன்னாரில் இடம்பெற்றது.

இதன்போது, 190 புள்ளிகளைப் பெற்று 3ஆம் இடத்தைப் பெற்ற நிதுர்சன் பிரொடோ மற்றும் ஏனைய 25 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டு பின் அவர்களுடைய பெற்றோர் உறவினர்களுடன் மன்னார் பஸ்தரிப்பு நிலையப் பகுதியில் குறித்த மாணவர்களை கௌரவித்து  மாலை அணிவித்து இசை வாத்திய நிகழ்வுகளோடு பாடாசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர், இராணுவ பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0

  • rakhu Friday, 08 October 2010 01:34 AM

    சந்தோசமா இருக்கு குட் பாய்ஸ் காலேஜ் அன்ட் டீச்சர்ஸ்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .