2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உணவுப் பொருட்களின் விலையில் திடீர் உயர்வு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 11 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னாரில் தற்போது சில உணவுப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்த நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ பழப்புளி தற்போது 260 ரூபாவிற்கும் 18 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தேங்காயொன்று தற்போது 60 ரூபாய் வரையும் 14 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டையொன்று தற்போது 18 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

இவ்விலையேற்றம் தொடர்பாக வர்த்தகர்களிடம் கேட்டபோது மேற்படி பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றமையினாலேயே அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .