2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மன்னார் தமிழ் செம்மொழி விழா இன்று ஆரம்பம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழ் செம்மொழி விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தின் வித்துவான் ராச்மான் அரங்கில் இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து இவ்விழா 23ஆம், 24ஆம், 25ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளது. மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்திரு தழிழ்நேசன் அடிகளார் தலைமையில் இடம்பெரும் இவ்விழாவின் இன்றைய நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நிக்கொலஸ் பிள்ளையும் சிறப்பு விருந்தினார்களாக மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் ச.மோகநாதன், மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மெல், முன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி எஸ்.றதனி யுட் ஆகியோர் கலந்து சிறப்பிக்கப்படவுள்ளனர்.

இன்றைய ஆரம்ப நிகழ்வுகளாக ஊர்தி பவனி உவ்பட பல நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .