2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முல்லைத்தீவு வெடி விபத்தில் காயமடைந்த இரு சிறுவர்கள் வவுனியா வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 16 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுவர்கள் சிகிச்சைக்காக வவுனியா பொதுவைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள்  மீள்குடியேறிய சிலாவத்துறை கிராமத்தில் வீட்டு வளவிலுள்ள குப்பைகளை கூட்டி  அதனை பனை மரத்தின் கீழ் குடும்பப் பெண் எரியூட்டியபோது, இந்த வெடிப்புச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.  

இதில் சகோதரர்களான சிறுவர்கள்  இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட அரசினர் பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .