2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மன்னாரில் கடும் மழை

Menaka Mookandi   / 2010 நவம்பர் 19 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னாரில் நேற்று மாலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளமையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு வருகின்றது. நேற்று வியாழன் மாலை 5மணி தொடக்கம் கடும் மழை விட்ட விட்டு பெய்து வருகின்றது.

இதனால் நேற்று இரவு மன்னாரில் மின்வினியோகத்தில் தடங்கள் ஏற்றபட்டது.எனினும் மின் வினியோகம் வழமைக்குத்திரும்பியது.

இன்று அதிகாலை முதல் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இதனால் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களும் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். மன்னார் பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீர் வழிந்தோட முடியாத நிலையில் பல இடங்களில் வெள்ளமாக தேங்கி நிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .