2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மன்னார் முருங்கன் மஹா வித்தியாலயத்தில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2011 மார்ச் 02 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்சாத் றஹ்மத்துல்லா)

இசுறு பாடசாலை பௌதீகவள அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மன்னார் முருங்கன் மஹா வித்தியாலயத்தில் இருமாடிக் கட்டிடத்தை நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில்,  வர்த்தக மற்றும் முதலீட்டு விவகார அமைச்சர்  றிசாத் பதியுதீன்,  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் உட்பட பல அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

இக்கட்டிட நிர்மாணப்பணிக்கென மூன்றரை கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

நாடு முழுவதிலும் தெரிவு செய்யப்பட்டுள்ள  35 பாடசாலைகளுக்குள் மன்னார் மாவட்டத்தில் மூன்று பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X