2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வயல் கிணற்றில் தவறி வீழ்ந்து தந்தையும் மகனும் பலி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

வயல் கிணற்றில் தவறி வீழ்ந்து தகப்பனும் மகனும் மரணமான சம்பவம் செட்டிகுளம் பொலிஸ் பிரிவிக்குட்பட்ட சின்னசிப்பிக்குளத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை வயல் கிணற்றில் தவறி வீழ்ந்த இவர்களின் சடலங்கள் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டது.

நேரியகுளத்தைச் சேர்ந்த விவசாயியான  (வயது 48)
யாசீன், அவரது மகன் இஷ்வான் (வயது 12) ஆகியோரை கிணற்றில் வீழ்ந்து மரணமானவர்கள் ஆவர்.

வயலுக்கு சென்ற இவ்விருவரும்  இரு தினங்களாக காணவில்லையென்று தேடிச்சென்றபோது, இவர்கள்  வயல் கிணற்றில் வீழ்ந்து கிடப்பதை கண்டுள்ளதாக மரணவிசாரணையில்  உறவினர்கள் தெரிவித்துள்ளனர.;

இவர்களது சடலங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை நேரியகுளத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .