2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கைதிகளின் விபரங்களை பார்வையிட தினமும் கூடும் உறவுகள்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 19 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

வவுனியா - கண்டி வீதியில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு விசாரணை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விபரங்களை தினமும் நெருங்கிய  உறவினர்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

வவுனியா - கண்டி வீதியில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு விசாரணை அலுவலகத்தில் தடுப்புக்காவலிலுள்ள கைதிகளின் விபரங்களை நெருங்கிய  உறவினர்கள் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் பெருமளவிலானோர் அங்கு சென்று தமது உறவுகள் குறித்து  விசாரித்து வருகின்றனர்.

யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய  தகவல்கள் எதுவுமே  தமக்கு  தெரியாதென  அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படையினரிடம் உள்ளவர்களுடைய விபரங்களை இங்கு பெற்றுக்கொள்ளலாமென தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X