2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிளிநொச்சியில் வாழ்வாதார கடன் உதவிக்கான காசோலை வழங்கப்பட்டது

Suganthini Ratnam   / 2011 ஜூன் 22 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கிளிசொச்சியின் ஜெயந்திநகர்,  சிவநகர் ஆகிய கிராம மக்களுக்கு வாழ்வாதார கடன் உதவிக்கான காசோலைகளை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி நேற்று  செவ்வாய்கிழமை வழங்கி வைத்தார்.

ஜெயந்திநகரில் 40 பயனாளிகளுக்கு பத்து இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபாவும் சிவநகரில் 27 பயனாளிகளுக்கு ஏழு இலட்சத்து எழுபத்தெட்டாயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டது.   சமூக பொருளாதார அமைச்சின் மீள்ளெழுச்சித் திட்டத்தினால் மேற்படி கிராமங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நிதியே வழங்கி வைக்கப்பட்டது.

இதில் ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .