2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.சுகந்தினி)

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன் இன்று –தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையிலேயே அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகவும்  அவர் கூறினார்.

இதற்கு முன்னர் கடந்த மாதம் 3ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .