2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிராமத்திற்கு ஓர் வீடு என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மன்னாரில் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 20 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிராமத்திற்கு ஓர் வீடு என்னும் வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தின் ஐந்து  பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கட்டப்பட்ட ஐந்து வீடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டன.

அந்த வகையில், மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட மன்னார் நானாட்டன் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருங்கன் மாளிகைப்பிட்டியில் அமைக்கப்பட்ட வீடு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தலைமையில்  நடைபெற்ற இந்த நிகழ்வில்  கௌரவ விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், சிறப்பு விருந்தினர்களாக வர்த்தகத்துறை அமைச்சரின் இணைப்புச் செயலாளர் அலிக்கான செரிப், நானாட்டான் பிரதேசசபை உறுப்பினர்கள், இளைஞர்சேவை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .