2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மன்னார் அரச அதிகாரிகளுக்கு மொழி சார்ந்த உரிமை தொடர்பில் செயலமர்வு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 30 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மக்கள் ஆதரவு மன்றத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் மொழி சார்ந்த உரிமைகள் தொடர்பான செயலமர்வு இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஏ.சரத் ரவீந்திர குறித்த செயலமர்வில் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

சிறுபான்மை மொழி உரிமைகளை உறுதிப்படுத்துதல், மேம்படுத்துதல், வலுவூட்டுதல் தொடர்பாக மன்னார் அரச திணைக்கள அதிகாரிகளுக்காண ஒரு நாள் செயலமர்வாக இடம் பெற்றது. இச்செயலமர்வு மூலம் மொழி சார் பிரச்சினைகள், சட்டங்கள், அரசியல் யாப்புரிமைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுசரனையினை மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .