2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பிரதேச இளைஞர் கழக அதிகாரிகளுக்கான மாவட்ட பயிற்சி வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பிரதேச இளைஞர் கழகங்களின் அதிகாரிகளுக்கான மாவட்ட மட்டத்திலான பயிற்சி வேலைத்திட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை, மன்னார் முருங்கன் ம.வி பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனையின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இளைஞர்களுக்கான தலைமைத்துவத்தை மேம்படுத்தி இளைஞர்களை அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுவதற்காக குறித்த பயிற்சி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை ஆரம்பமான குறித்த பயிற்சி வேளைத்திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை வரை மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது. மன்னார்,வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து 9 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தலா 5 இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் வீதம் 45 பேர் தெரிவு செய்யப்பட்டு குறித்த பயிற்சி வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

இன்று சனிக்கிழமை இடம் பெற்ற ஆரம்ப நிகழ்வின் போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் இணைப்பாளர் அலிக்கான் சரீப், முருங்கன் மாவட்ட வைத்திய அதிகாரி ஒஸ்மன்,முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமால் குனவர்த்தன, பிரதேச இளைஞர் சேவை அதிகாரி டியூக குரூஸ், மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட அதிகாரி பூலோகராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .