2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அபிவிருத்திகள் மக்களின் விருப்பின்படி தெரிவுசெய்யப்பட வேண்டும்: றிஷாட்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


வன்னி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் விருப்பத்தின் படியே தெரிவு செய்யப்பட வேண்டும் என்று வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

வன்னி வசந்தம் என்னும் தொனிப் பொருளில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் உட்பட மாகாண அமைச்சின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் சமூகமளித்திருந்தனர்.

இக்கூட்டத்தில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

"வவுனியா மாவட்டத்தில் சகல பிரதேசங்களும், எவ்வித பாகுபாடுகளுமின்றி அபிவிருத்தி செய்யப்படுகின்றன. இதில் இனம், மதம், பார்ப்பதில்லை, எங்கு தேவை இருக்கின்றதோ அங்கு முன்னுரிமைபடுத்தி அபிவிருத்திகளை செய்கின்றோம்.

பிரதேசத்தில் அபிவிருத்திகளை செய்கின்ற போது, மக்களின் தேவைக்கு முன்னுரிமையளித்து சகல மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் உள்வாங்கி திட்டங்களை தயாரிக்க வேணடும். இந்த மாவட்டம் இன்று அமைதியாக காணப்படுகின்றது. ஆனால் சிலருக்கு மீண்டும் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க தேவையாகவுள்ளது. அதற்கு இடம்கொடுக்க முடியாது.

இந்த நாட்டின் ஜனாதிபதி தான் வன்னி மாவட்டத்துக்கான நிதிகளை நாம் கேட்கின்ற போதெல்லாம் ஒதுக்கித்தருகின்றார் என்பதை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இம்மாவட்டத்தின் மின்சாரம், சுகாதாரம், பாதை, கல்வி, மக்களின் வாழ்வாதார திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நாம் நிதிகளை வழங்கி மாவட்டத்தை முன்னேற்றகரமான பாதைக்கு இட்டுச் செல்கின்றோம். எனவே சகலரும் மக்களுக்கான இந்த அபிவிருத்திகளை முன்னெடுக்க உதவிகளை வழங்குங்கள்' என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .