2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காணாமல் போன மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 03 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பேசாலையில் இருந்து கடந்த 25ஆம் திகதி கடல் தொழிலுக்குச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒரு மீனவரின் சடலம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் பேசாலையைச் சேர்ந்த எம்.ஜோசப் டியூரன் அப்புசாமி(வயது-26) மற்றும் கமால்டீன் சாமீன் (வயது-26) ஆகிய 2 மீனவர்களும் கடந்த 25 ஆம் திகதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

இவர்கள் சில தினங்கலாகியும் வீடு திரும்பாமை குறித்து இவர்களுடைய உறவினர்கள் கடந்த 28 ஆம் திகதி தலைமன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில் நெடுந்தீவு கடற்கரையில் சடலம் ஒன்று ஒதுங்கிய நிலையில் அது காணமால் போன போசாலை மீனவர்களில் ஒருவரான எம்.ஜோசப் டியூரன் அப்புசாமி(வயது-26)  என அடையாளம் காணப்பட்டது.

இந்த நிலையில் குறித்த மீனவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணியளவில் பேசாலையில் உள்ள அன்னாரது விட்டிற்கு கொண்டு வரப்பட்டு சிறிது நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மற்றைய மீனவர் தொடர்பான தகவல் எவையும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X