2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முல்லை. வலய கல்விப் பணிப்பாளரின் வீட்டில் திருட்டு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளரின் வீட்டில் நேற்று முன்தினம் (3) இரவு திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, கணுக்கேணியில் வாடகை வீடொனறில் வசித்து வரும் குறித்த வலயக் கல்விப் பணிப்பாளர் முள்ளியவளை ஹிஜ்ராபுரத்தில் புதிதாக வீடொன்றை நிர்மாணித்து வருகின்றார்.

இந்நிலையில் புதிதாக நிர்மாணித்துக் கொண்டிருக்கும் வீட்டிலேயே 75 ஆயிரம் ரூபா பெறுமதியான வீட்டுப்பொருட்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர்  செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .