2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மன்னார் மறைமாவட்ட ஆயர்- வடமாகாண மஜ்ஜிரசுல் உலமா சபையினர் சந்திப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கும் வடமாகாண மஜ்ஜிரசுல் உலமா சபையினருக்கும் இடையில் புதன்கிழமை(23) மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பில் வடாகாண மஜ்ஜிரசுல் உலமா சபைத் தலைவர் மௌலவி முபாரக் ரசாபி தலைமையில் சென்ற மன்னார் மாவட்ட மஜ்ஜிரசுல் உலமா சபை தலைவர் மௌலவி எம்.அசீம், சமாதான பேரவையின் தலைவர் வைத்தியர் எம்.எலியாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது வடமாகாணத்தில் உள்ள தமிழ், முஸ்ஸிம் மக்கள் எதிர்நேக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதோடு முசலி பிரதேசச் செயலாளர் பிரிவிற்குற்பட்ட முள்ளிக்குளம், மறிச்சிக்கட்டி ஆகிய கிராமங்களில் மீள்குடியேறியுள்ள தமிழ், முஸ்ஸிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இந்நிலையில் வடமாகாணத்தில் உள்ள தமிழ், முஸ்ஸிம் மக்களை ஒன்றினைக்கும் வகையில் அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் தன்னிச்சையாகவும், பக்கச்சார்பாகவும் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் குறித்த மதத்தலைவர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது.

இனிவரும் காலங்களில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வீட்டுத்திட்டங்கள் உட்பட எவ்வித திட்டங்களாக இருந்தாலும் தமிழ், முஸ்ஸிம் மக்கள் ஒன்றிணைக்கப்பட்டு நீதியான முறையில் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தமிழ், முஸ்ஸிம் மக்களை ஒன்றினைக்க வெகு விரையில் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என வடாகாண மஜ்ஜிரசுல் உலமா சபைத்தலைவர் மௌலவி முபாரக் ரசாபி மன்னார் ஆயரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் செபமாலை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X