2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வவுனியா வெதுப்பகங்களில் சோதனை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 04 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா நகர்ப் பகுதியிலுள்ள வெதுப்பகங்களில் இன்று  வெள்ளிக்கிழமை காலை அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவு அதிகாரிகள்;  திடீர்ச் சோதனை மேற்கொண்டதாகவும்  இதன்போது, 03 வெதுப்பகங்களில் 450 கிராமுக்கும் குறைந்தளவில் பாண் உற்பத்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த அலுவலகத்தின் பொறுப்பதிகாரி பி.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

இதனையடுத்து, அவ்வெதுப்பகங்களிலிருந்து நிறை குறைவான  பாண்களை  பறிமுதல் செய்ததாகவும் அவர் கூறினார். 

வெதுப்பக உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X