2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

உள்ளூராட்சிமன்ற தேர்தல்;வன்னியில் 3,852பேர் தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.விவேகராசா)

எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க 3,852 பேர் தகுதி பெற்றுள்ளனர் என வவுனியா உதவி தேர்தல் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி தெரிவித்தார்.

இவர்களுக்குரிய வாக்குசீட்டுக்கள் எதிர்வரும் 25ஆம் திகதி அனுப்பிவைக்கப்படும் எனவும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் சுமார் இரண்டாயிரம் பேர் தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .