2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘எழுக தமிழ் பேரணிக்கு முழு ஆதரவு’

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்   

எழுக தமிழ் பேரணிக்கு, நாம் முழுமையான ஆதரவினை  வழங்கி அதில் கலந்கொள்வோம் என, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது  தொடர்பில் அவ்வமைப்பின் தலைவி  யோ. கனகரஞ்சனி, இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,

எழுக தமிழ் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணிக்கு எமது பூரண ஆதரவை வழங்குவதுடன், இதில்  தனிப்பட்ட மத, கட்சி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து தரப்பினனர்களையும் கலந்துகொள்ளுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ் மக்களின் குரலாக கருதியே தாம் பூரண ஆதரவைவழங்குவதாகவும், எதிர்மறையான, காழ்புணர்வுகளை கடந்து அனைவரும் இதில் கலந்துகொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .