2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குருந்தூர் மலை விவகாரம்: ரவிகரன் முறைப்பாடு

Niroshini   / 2021 ஜனவரி 27 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம்  சண்முகம், விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன என, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில், இன்று (27) முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் மீண்டும் அவ்விடத்தில் நிறுவவேண்டும் எனவும் தொடர்ந்தும் தமிழ் மக்கள் குருந்தூர் மலைக்குச் சென்று தமது வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும் எனவும், ரவிகரன் குறித்த முறைப்பாட்டினூடாக கோரியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .