2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கல்விச் செயற்பாடுகள் தொடர்பாக மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

Editorial   / 2019 மார்ச் 25 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன் 

 

2017, 2018ஆம் கல்வியாண்டுக்கு  சேர்க்கப்பட்ட மாணவர்களில்,  தங்குமிட வசதிக்காக விண்ணப்பித்த மாணவர்கள், ஆரம்ப திகதிக்கு முன்தினம் விடுதிக்கு சமூகமளிக்குமாறு, வவுனியா வளாகம் கோரிக்கை விடுத்துள்ளது. 

2017, 2018ஆம் கல்வியாண்டுக்கு  சேர்க்கப்பட்ட மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் தொடர்பில், வவுனியா வளாகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதந்த அறிக்கையில், வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் மாணவர்களின் திசைமுகப்படுத்தல் நிகழ்வு - ஏப்ரல் 17ஆம் திகதியும்  கல்விச் செயற்பாடுகளின் தொடக்க நிகழ்வு 0 ஏப்ரல் 22ஆம் திகதியும்  நடைபெறவுள்ளதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வணிகப் பீடத்தின் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளின் தொடக்க நிகழ்வு, ஏப்ரல் 22ஆம் திகதியில் நடைபெறுமெனவும், வளாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வவுனியா வளாகத்தின் புதிய மாணவர்கள், தங்களது திசைமுகப்படுத்தல், கல்விச் செயற்பாடுகள் ஆகியன தொடர்பில், தாமதமின்றி வவுனியா வளாகத்துடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தி கொள்ளுமாறும், அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X