2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘நிரந்தர வீதியை உருவாக்கவும்’

Editorial   / 2018 ஜனவரி 06 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - துணுக்காய் - உயிலங்குளம் அணைக்கட்டு வீதி வழியான போக்குவரத்தைத் தடைசெய்து, குளத்தின் கீழான நிரந்தர வீதியை உருவாக்குமாறு, உயிலங்குளம் பொது அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

அணைக்கட்டு வழியாக நடைபெறுகின்ற போக்குவரத்து காரணமாக குளத்தின் அணைக்கட்டுக்கு சேதங்கள் உருவாகி வருவதாகவும் குளத்தின் கீழான அல்லது வேறு வழியின் ஊடாக வீதியை மாற்றுவதன் மூலம் குளத்தின் அணைக்கட்டைப் பாதுகாக்க முடியும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்,  சுமைகளுடன் வாகனங்கள் பயணிப்பதால் குளத்தின் அணைக்கட்டுக்கு ஆபத்து காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அணைக்கட்டு வழியான போக்குவரத்த மாற்றுமாறு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கோரிக்கைகள் விடுத்தும் புதிய வீதி அமைக்கப்படாததன் காரணமாக, குளத்தின் அணைக்கட்டு வழியாக துணுக்காய்க்கும் அம்பலப்பெருமாள்குளம் வரையான போக்குவரத்துகள் நடைபெறுவதாகவும், கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .