2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பணிப்புறக்கணிப்பில் வவுனியா வைத்தியர்கள்

க. அகரன்   / 2017 செப்டெம்பர் 13 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சைட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சைட்டம் மருத்துவக் கல்லூரியை மூடக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் மாவட்ட மட்டத்திலான எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

குறிப்பாக, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் முன்னெடுத்த வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .