2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பணிப் பகிஷ்கரிப்பால் நோயாளர்கள் சிரமம்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள், இன்று காலை முதல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால், மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

சைட்டம் மருத்துவக் கல்லூரியை மூடக் கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் மாவட்ட மட்டத்திலான மூன்று நாள் எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்  வகையில், மன்னார் மாவட்ட  அரச வைத்திய அதிகாரிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அந்தவகையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை, மற்றும் தலைமன்னார்,பேசாலை,முருங்கன் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .