2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பஸ் சாரதிக்கு விளக்கமறியல் நீடிப்பு

எஸ்.என். நிபோஜன்   / 2017 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான சொகுசு பஸ்ஸின் சாரதியை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற  பதில் நீதவான் நீதிவான் எஸ். சிவபால சுப்பிரமணியம், நேற்று (10) உத்தரவிட்டார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஏ9 வீதியால் பயணித்துக் கொண்டிருந்த சொகுசு பஸ், கடந்த 4 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில், கிளிநொச்சியில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

குறித்த சம்பத்தின் போது மின்கம்பங்கள், தொலைத்தொடர்பு கம்பங்கள், கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகம் என்பன சேதமாக்கப்பட்டதுடன், பஸ்ஸில் பயணித்த நான்கு பேர் காயமடைந்திருந்தனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கிளிநொச்சிப் பொலிஸார், பஸ்ஸின் சாரதியை கைதுசெய்திருந்ததுடன், அவர், நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X