Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.என். நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்,இன்று, 203ஆவது நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களின் கவனயீர்ப்புப் போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலின் ஒதுக்குபுறமாக இடம்பெற்று வருகிறது.
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும் கண்முன்னே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டும் இராணுவத்திடம் சரணடைந்தும் என பல வழிகளில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் தங்களின் காணாமல் செய்யப்பட்ட உறவினர்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த வாரம் இடம்பெற்று முடிந்தது. திருவிழா ஆரம்பிக்கும் போது ஆலய நிர்வாகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களிடம் திருவிழா இடம்பெறும் பத்து நாட்களும் தங்களின் பந்தலை அகற்றி திருவிழாவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அதன் பின்னா் மீண்டும் வழமை போல் பந்தல் அமைத்து கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்ளுங்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள், ஆலயத்துக்கு அருகிலுள்ள சிறிய கடை ஒன்றில் தங்களின் கவனயீர்ப்ப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இம்மாத 6ஆம் திகதி திருவிழா நிறைவுற்ற நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் கடிதம் ஒன்றை ஆலய நிர்வாகம் இன்று (10) மாலை வழங்கியுள்ளனா்.
அதில், தங்களின் 2017-09-10 திகதி நிர்வாக கூட்டத்தின் தீர்மானத்தின் படி ஆலயத்தில் தொடர்ந்தும் விழாக்கள் இடம்பெற இருப்பதால், ஆலய வீதியை தங்களுக்கு வழங்க முடியாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குறித்த கடித்தின் பிரதிகள், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபா்,நாடாளுமன்ற உறுப்பினா் சிறிதரன், கரைச்சி பிரதேச செயலாளா், கிராம சேவையாளர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளனா்.
இந்நிலையில், ஆலய நிர்வாகத்தின் இந்த செயற்பாடு சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago