2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முகம் சிதறி இளைஞன் பலி

Editorial   / 2018 ஜூன் 30 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முள்ளிவளை - கற்பூரப்புல்வெளி காட்டுப் பகுதியில், சட்டவிரோததுப்பாக்கி வெடித்ததில்,இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முள்ளியவளை - 01ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மனோகரன் கஜிந்தன் (வயது 22) என்ற இளைஞனே, இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன், நேற்று மாலை, வேட்டைக்காக சட்டவிரோத துப்பாக்கியுடன் கற்பூரப்புல்வெளி காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு மிருக வேட்டைக்காக துப்பாக்கியைப் பயன்படுத்தியபோது, துப்பாக்கி வெடித்து சிதறியதில் குறித்த இளைஞனின் முகப்பகுதி மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .