Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
சண்முகம் தவசீலன் / 2018 பெப்ரவரி 13 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நேற்று (12) இரவு ஆர்.பி.ஜி வகை குண்டு ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில், சேகரிக்கப்பட்டிருந்த குப்பைக்கு தீ வைக்கப்பட்டிருந்தபோதே குறித்த குண்டு வெடித்துள்ளது.
குறித்த காணிக்கு அண்மையாக மக்களின் குடியிருப்புகள் உள்ளபோதும், குண்டு வெடிப்பால் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.
இது தொடர்பில் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
யுத்த காலத்தில் இழப்புகளையும், பாதிப்புக்களையும் சந்தித்த நாம், இக்குண்டு வெடிப்பால் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளோம். வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பிரதேசமாக இப்பிரதேசம் அறிவிக்கப்பட்ட பின்னரே, மீள்குடியேற்றம் செய்யப்பட்டோம். எனினும், இவ்வாறு மக்கள் பயன்படுத்தும் பகுதியிலிருந்து குண்டு வெடித்தமை அச்சத்தை ஏற்படுத்துகின்றது.
எனவே அதிகாரிகளோ, கண்ணிவெடியகற்றும் நிறுவனங்களோ இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago