2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

முல்லைத்தீவில் பெரமுனவின் ஆண்டு விழா

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நான்கு வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர், யுவதிகள் மாநாடும் முல்லைத்தீவு தொகுதிக்கான சம்மேளனக் கூட்டமும், முல்லைத்தீவு நகர பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (31) நடைபெற்றுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தானின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் ஆளும் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  ஜெயரத்ன ஹேரத் கலந்துகொண்டார். 

அத்துடன்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம், முல்லைத்தீவு தொகுதிக்கான செயற்குழு உறுப்பினர்கள்,   முல்லைத்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .