2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

வயோதிப பெண்ணை காணவில்லை என முறைப்பாடு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 பெப்ரவரி 12 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனநலம் பாதிக்கப்பட்ட 62 வயதுடைய வயோதிப பெண்ணெருவர் காணாமற்போயுள்ளதாக நேற்று (11) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச்சேர்ந்த 62 வயதுடைய வடிவேல் பாக்கியம் என்பவரே இவ்வாறு காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்களால் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .