2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வவுனியாவில் கேரள கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

Nirshan Ramanujam   / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வவுனியா நகர பஸ்நிலையத்துக்கு அருகாமையில் 2 கிலோ 24 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் இன்று (12) காலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை நாளை (13) வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .