2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வீதிகள் சேதம்; பொதுஅமைப்புகள் விசனம்

Editorial   / 2018 ஜனவரி 06 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - துணுக்காயில் இருந்து உயிலங்குளம் வரை அமைக்கப்பட்ட நிரந்தர வீதியும் துணுக்காயில் இருந்து புத்துவெட்டுவான் வழியாக கொக்காவில் வரையான வீதிகள் பல இடங்களில் குன்றுங்குழியுமாக மாறியுள்ளன.

இவ்வீதிகள் அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலேயே குன்றுங்குழியுமாக உருவாகியுள்ளது.

வீதிகளைப் புனரமைப்புச் செய்த  ஒப்பந்தக்காரர்கள், வேலைகளை தரமற்ற முறையில் மேற்கொண்டதனாலேயே தற்போது வீதிகள் குன்றுங்குழியுமாக மாறியுள்ளதாகவும் வீதிக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை சூறையாடிய ஒப்பந்தகாரர்கள் தரமற்ற முறையில் வீதிகளை அமைத்துள்ளதாகவும் இப்பகுதி பொதுஅமைப்புகள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகள் சிறந்த முறையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தால், வீதிகளை அமைக்கும்போது, ஒப்பந்தகாரர்கள் பிழையான முறையில் வீதிகளை அமைத்திருக்கமாட்டார்கள் என, பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .