2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மன்னார் மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கருத்தரங்கு

Super User   / 2011 ஜூலை 18 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 'குற்றத்தால் பாதிக்கப்படோருக்கான உதவியும் பாதுகாப்பும்' எனும் தெனிப்பொருளிலான கருத்தரங்கு கடந்த சனிக்கிழமை(16) இடம்பெற்றது.

இக்கருத்தரங்கில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் நிசனங்க உடுலாகமஇ சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பி.குமார ரட்ணம், சட்டத்தரணி சஜிவாணி அபயக்கோண்  மற்றும் மன்னார் மாவட்ட சட்ட உதவி ஆணைக்குழுவின் பணிப்பளர் இ.சி.பெல்டானோ ஆகியோரும் விரிவுரை நிகழ்த்தினர்.

மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எச்.எப்.கொடிதுவக்குஇ உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த சமரசேகர மற்றும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஷான் தலுவத்த உள்ளடங்களாக மன்னார் மாவட்டத்தில் கடமை புரியும் சுமார் 150 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .