2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வவுனியாவில் தொலைபேசி விற்பனை நிலையத்தில் திருட்டு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

வவுனியாச் சந்தை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றது.

குறித்த தொலைபேசி விற்பனை நிலையத்தை  உரிமையாளர் இரவு நேற்றிரவு பூட்டிவிட்டுச் சென்ற பின்னரே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாகவும் இதன்போது பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விற்பனை தொலைபேசி நிலையத்தில் மூன்றாவது தடவையாகவும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.  இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .