2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மோட்டரை திருடியவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமாரபுரம் பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து நீரிறைக்கும் மோட்டரொன்றை திருடிய  குற்றச்சாட்டில் மேசன் ஒருவரை திங்கட்கிழமை (07)   கைதுசெய்ததாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவரிடமிருந்து அம்மோட்டரை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர். 

வீட்டு கட்டுமாணப் பணியில் ஈடுபட்ட இவர் சனிக்கிழமை (05)  இரவு மோட்டரை திருடியுள்ளார்.

இத்திருட்டு தொடர்பில்  முள்ளியவளை பொலிஸில்  குறித்த வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்தார். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சந்தேக நபரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .